சனி, 28 மே, 2011

சர்தாரா .. கொக்கா?

சர்தாரா .. கொக்கா? 

இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!

அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.

சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!

சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
 
 
==========================================================
அவசரப்படாதே மச்சி!!

 ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

Read more: http://www.livingextra.com/2011/03/blog-post_24.html#ixzz1NiENtxnS
வயது முதிர்ந்த தாத்தா ஒருவர் , மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் .

அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த தாத்தா  :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழுந்து  கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானாவே லைட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் .
 
ஒரு நாள் மருத்துவர் ஆர்வம் பொறுக்க முடியாமால் அந்த பெரியவரின்  வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லைட் ஆன் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "

அதற்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் ராத்திரிலே பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிறாரேனு நானே கவலைலே இருக்கேன்."


ராகு காலம்

ராகு காலம் 
நிழல் கிரகமான ராகுவின் நிழல் பூமியில் விழும் நேரமே ராகு காலமாகும் 

இதை நாபகம் வைத்துகொள்ள திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது நாயமா 
எமகண்டம் 
கேதுவின் நிழல் பூமியில் விழும் நேரமே எமகண்டமாகும் இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யகூடாது 
வித்தையில் புத்திய செளுத்திடின் திடமான நாபக சக்தி வெளிப்படும் 

யோகங்கள் 
நட்சத்திரமும் கிழமையும் சேர்ந்தால் யோகம் ஏற்படுகிறது அமிர்த யோகம் சித்தயோகம் நல்லது பிரபாலரிச்ட யோகம் மரண யோகம் ஆகாது 

தீதுறு நட்சத்திரங்கள் 
இந்த நட்சத்திரத்தில் எந்த செயலும் முதலில் செய்யகூடாது ஆனால் எப்போதும் செய்யும் செயல்களை தாராளமாக செய்யலாம் 
கரினாட்கள்
மாதங்களில் சில நாட்களில் கரினாட்கள் ஆகும் என்ன யோகம் வந்தாலும் இந்த நாட்களில் அதுவும் செய்யகூடாது

சனி, 7 மே, 2011

ஆறாம் பாவகம்


அன்பு மாணவர்களே இது வரை ஐந்தாம் பாவகம் பார்த்தீர்கள் இனி பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆறாம் பாவகம் பார்க்கலாம் .
இந்த பாவகத்தின் மூலம் நோய்கள், பகைவர்களால் உண்டாகும் துன்பங்கள், ஆயுதங்களினால் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சண்டைகள், உடல் உபாதைகள், பணம் நஷ்டங்கள், வம்புகள், வழக்குகள், நீதிமன்றம் போகுதல், காவல் நிலையம் செல்லுதல் , சிறைசாலை செல்லுதல், பாலுனுர்வு நோய்கள், பிறமாதர் தொடர்புகள், கடன்கள்  இவை அனைத்தும் அறியலாம் .

எப்படி பட்ட பாவகம் பாருங்கள் மாணவர்களே , இந்த பாவகம் சிக்கலானது
  1. இந்த பாவக அதிபதி வலு பெறலாமா?
  2. இந்த பாவக அதிபதியை  நாம் பிரட்சனைகளை செய்பவன் என்று நாம் எடுத்துகொள்ளவேண்டும்.
  3. இந்த பாவக அதிபதி எங்கு இருந்தாலும் அந்த பாவகதிர்க்கு பிரச்சனை ஏற்படும்
  4. உறவு சம்மந்தப்பட்ட பாவக அதிபதிகள் இந்த பாவகதில் இருந்தால் அந்த உறவு ஜாதகனுக்கு பிரச்சனை ஏற்படுத்தும், அவர்கள் சண்டைக்கு வருவார்கள், கடன் கேட்பார்கள், ஜாதனுக்கு முடிந்த வரை தொல்லைகளை கொடுப்பார்கள், ஜாதகன் அவர்களால் கஷ்டம் ,நஷ்டம் படுவான், அவர்களுக்குள் தகராறு வந்து கொண்டே இருக்கும்
  5. மூன்றுக்கு உடையவன் ஆறில் இருந்தால் சகொதிரனால் ஜாதகனுக்கு பிரச்சனை தான் ,அவனே எதிரியாக மாறுவான், கடன் கேட்ப்பான், சொத்து பங்கு கேட்ப்பான், சண்டைக்கு வருவான் , இவர்கள் இருவரும் ஒருவேளை மது அறிந்துவிட்டால் ,அவ்வளதுதான் பொது இடத்தில் சூப்பராக திட்டிகொல்வார்கள், சண்டை போட்டு கொள்வார்கள், கட்டி பிடித்து உருளுவார்கள் .
  6. நாளுக்கு உடையவன் ஆறில் இருந்தால் தாயாரே பிரச்சனை செய்வார் ,சதா ஜாதகனை திட்டிக்கொண்டே இருப்பார், தாய்க்கும் ஜாதகனுக்கும் அவ்வளவு ஒத்துவராது
  7. ஒன்பதுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் தந்தைக்கும் ,மகனுக்கும் அவ்வளவு பந்தம் இருக்காது , தந்தையார் சதா ஜாதகனை திட்டிகொனே இருப்பார்.
  8. ஆறில் ஐந்துக்கு உடையவர் இருந்தால் சாதகனின் குழந்தையால் ஜாதகருக்கு பிரச்சனை தான் , குழந்தை நோயால் அவதிப்படும், குழந்தைக்காக ஜாதகர் கடன் பட நேரிடும்
  9. ஏளுக்குடையவர் ஆறில் இருந்தால் மனைவிக்கும் ,ஜாதகனுக்கும் அடிக்கடி சண்டை வரும், ஒருவருக்கொருவர் ஒத்துபோகமாட்டார்கள், மனைவி வியாதியால் பீடிக்க படுவார்,  பொண்டாட்டிக்காக ஜாதகம் நிறைய கடன் வாங்குவான்,  போலிஸ் ஸ்டேசன் போகும் வரை இருவரும் சண்டையிட்டுகொல்வார்கள்,
  10. பதினொன்றுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் மூத்த சகொதிரனால் பிரச்சனைதான், அவனால் ஜாதகருக்கு துன்பம் ஏற்படலாம்
அன்பு மாணவர்களே ,புரிகிறதா, நன்றாக யோசியுங்கள், உங்கள் மூளையை நன்கு கசுக்குங்கள், புதிர் நிச்சயம் கிடைக்கும் , அதற்காக ஒன்றும் கவலை படாதீர்கள் , பாவக ஆராய்ச்சி பன்ன பன்ன பலன் எளிதாக கிடைத்துவிடும் 

சரி மாணவர்களே இனி ஆறாம் பாவகத்தில் நவ கிரகமும் நின்ற பலனை கொஞ்சம் பாப்போம்
  1. ஆறாம் பாவகதில் சூரியன் இருந்தால் தந்தையே பிரச்சனை ஜாதகருக்கு செய்வார். ஜாதகருக்கு எதிரான செயல்களை தந்தை செய்வார், சந்திரன் இருந்தால் ஜாதகனுக்கு இதே நிலைதான் ,இந்த பாவகதில் செவ்வாய் நின்றாள் இளைய சகொதிரன் வம்புக்கு வந்துவிடுவான் ,புதன் இங்கு இருக்க கூடாது தாய் மாமன் உறவு அவ்வளவு இருக்காது அவர் கடன் கேட்பார், ஜாதகர் கொடுக்காவிட்டால் அவ்வளது தான் மாமன் சண்டைக்கு வருவார் , மாமன் உறவு சுடுகாடு வரை இருக்க வேண்டும் ,ஜாதகன் மாமனிடம் சரண்டர் ஆகி கொள்ளவேண்டும்
  2. ஆறில் குரு இருந்தால் குழந்தையால் பிரச்சனை ஏற்படும் , குழந்தை அடிகடி வெளிவட்டாரத்தில் சண்டை போட்டு வந்துவிடும் ,ஜாதகன் குழந்தையை அடிப்பான், குழந்தைக்கு தந்தை மேல் பகை வரும் .பெரியோர்களும், ஆசிரியர்களும் ஜாதகனுக்கு சப்போர்ட் பன்ன மாட்டார்கள்
  3. ஆறில் சுக்கிரன் இருந்தால் பொண்டாடியிடம் அடி வாங்க ஜாதகன் தயாராக இருக்க வேண்டும், அதுவும் வாய் உள்ள மனைவியாக இருந்தால் ஜாதகன் பெட்டி பாம்பாக இருந்து பழகி கொள்ளவேண்டும், எதிர்த்தால் சமையல் கட்டில் சாமான் உருளும், தக்காளி பறக்கும், ஜாதகனுக்கு ஒழுங்காக சாப்பாடு கிடைக்காது, பழைய சாதம் சாப்பிட பழகி கொள்ளவேண்டும் ,கொஞ்சம் பேசினாலே சண்டைக்கு அவள் வந்துவிடுவாள் ,சாதகன் பாடு திண்ட்டாடம் தான் ,சாதகன் தைரியசாலியாக இருந்தால் இந்த நிலையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்,
  4. ஆறில் சனி நிற்க கூடாது மூத்த சகொதிரனால் பிரச்சனை வரலாம், வேலை காரர்கள் எதிர்ப்பு காட்டுவார்கள்,ஆரி ராகு இருந்தால் சாதகனின் தந்தையின் பாட்டி யினால் கொஞ்சம் பிரச்சனை வரும் , விதவை பெண்களினால் பிரச்சனை வரும், ஆறில் கேது இருந்தால் ஜாதகரின் பாடி தகராறு செய்வார்
  5. நோய்க்கு அதிபதியான ஆருக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நித்ய நோயாளியாக மாறிவிடுவார்
  6. இரண்டாம் பாவக அதிபதி ஆறில் நின்றாள் ஜாதகரின் குடும்பமே எதிராக செயல்படும்
  7. ஆருக்குடயவன் எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த பாவகம் குறிக்கும் அவயதில் நோய் ஏற்படலாம்
  8. ஆருக்குடையவன் லக்னத்தில் நின்றாள் ஜாதகரிடம் எதிரி தோல்வி அடைவான்
  9. லக்னாதிபதி ஆறாம் பாவகம் சென்றால் ஜாதகன் எதிரியிடம் ஜாதகன் தோல்வி அடைவான்
  10. ஆறாம் வீட்டில் ராகு ,கேது இருந்தால் எதிரிக்கு பலம் குறைந்துவிடும் ஜாதகன் எதிரியை வெல்லுவான்
  11. ஆறாம் பாவகம் வேலையை குறிக்கும் பாவகம் இவன் பத்தில் ல்நின்றால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான்
  12. ஆறாம் பாவக அதிபதி நன்றாக இருந்தால் (வலுத்து இருந்தால் ) சாதகனின் உடல் நன்றாக இருக்கும், அவனுக்கு கடன் கிடைக்கும், கடன் கிடைத்தால் ஜாதகன் கடனை அடைக்க மாட்டான் கடன் கொடுத்தவன் சண்டைக்கு வருவான், ஜாதகரின் மேல் கேஸ் போடலாம் இதனால் ஜாதகன் நீதி மன்றத்திற்கு போகுவான் , அங்கு தண்டனை கிடைக்கலாம், ஏன் சிறை சாலை கூட போகலாம், ஜாகனுக்கு அடிகிடைக்கும் அதனால் வெட்டு காயம் வரலாம் ,சாதகனும் சண்டைக்கு போகலாம் (உடல் வலுத்து இருந்தாலே ஜாதகனுக்கு வீரம் வந்துவிடும்)
  13. ஆறாம் அதிபதி கெட்டு இருந்தால் சாதகனின் உடல் வலிமை இருக்காது,  கடன் கிடைக்காது , எதிரிககளின் தொல்லை வராது  இதனால் இந்த அதிபதி ரொம்பவும் கெட்டுபோக கூடாது இதமாக, பதமாக ,சமமாக இருக்க வேண்டும் . அதாவது அளவுடன் இருக்கவேண்டும் .
  14. லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் தாய்மான் ஜாதகனிடம் அன்பாக இருப்பான் ,சாதகனும் மாமனிடம் அன்பாக பழகுவான் ஆனால் ஒரு காலகட்டத்தில் அதுவே பிரச்சனை ஆகலாம்
ஆறாம் வீடு அதிபதி பன்னிரண்டு பாவகத்தில் நின்றாள் என்ன பலன் ஏற்படும் என்பதை கொஞ்சம் பார்க்கலாம்
  1. ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்றாள் ஜாதகன் பயந்த சுபாவம் கொண்டவன், பகைவர் தொல்லை, கடன் தொல்லை வரும், அடிக்கடி நோய் வாய் படுவார்கள், நல்ல பரிகாரத்தின் மூலம் மட்டும் இதை சரி செய்யலாம்
  2. இரண்டில் நின்றாள் கண்பார்வை மங்கும், கல்வி திறமை குறைபடும், வாக்கு வன்மை பாதிக்கப்படும், கடன் வாங்கி கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துவார்கள்
  3. மூன்றாவது வீட்டில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் விரோதிகளாக மாறுவார்கள், கடன் சுமை அதிகமாகும் ,அலைச்சல் அதிகமாகும், சிற்றின்ப பிரச்சனை வரும், காது கோளாறு ஆகும்
  4. நாலாவது வீட்டில் இருந்தால் வீடு பூமி பிரச்சனை அதிகமாகும், கடன்களுக்காக வீட்டை அடமானம் வைக்கும் நிலை வரும், தாயார் உடல் நிலை பாதிக்கும் ,உறவினர்ஜ்கள் சண்டை ஏற்படும் , சுக குறை ஜாதகனுக்கு வரும்
  5. மனதில் கெட்ட என்னம் ஏற்படும் ,பாவ காரியம் செய்வார்கள், இருதய நோய் ஏற்படலாம், குழந்தைகளினால் பிரச்சனை ஏற்படலால்ம் காதல் கசக்கும் , புத்திர தோஷம் வரலாம்  .
  6. ஆறாம் வீட்டில் இருந்தால் இது ஆட்சி வீடாக இருந்தால் நல்லது தீய தன்மை குறையும், பகைவர்களால் நன்மை கிடைக்கும், கடன் தொல்லை இருக்காது , தீய பலத்துடன் இருந்தால் இதற்க்கு எதிர்மாறான நிலை ஏற்படும்
  7. ஏழாம் வீட்டில் இருந்தால் மனம் சஞ்சலம் படும், குடும்ப மகிழ்ச்சி இருக்காது, ஆண்மை கோளாறு  வரலாம் , கணவன் மாணவி இடையே ஒற்றுமை இருக்காது, வெளி வட்டார பழக்கம் நன்மை கொடுக்காது
  8. ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் இது நல்ல பலத்துடன் இருந்தால் ஒன்றும் ஆகாது விபரீத ராஜ யோகம் ஏற்படும் ,ஆனால் உடல் வலுஇழந்து காணப்படும், கடன் கிடைக்காது, வேலை கிடைக்காது ஒழுங்க்கா வேலைக்கு போக மாட்டார்கள் .
  9. ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையார் விரோத போக்கு வரலாம், ஜாதகன் எளிதில் ஏமாறுவான், நீதி நேர்மை இருக்காது, சொத்தை ஜாதகன் விரயமாக்குவான், பெரியோர்களிடம் மதிப்பு இருக்காது, தருமம் செய்யமாட்டான்
  10. ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழிலை சரி வர செய்யமாட்டார்கள், உல்லாச வாழ்க்கை நடத்துவார்கள், பிறரை மோசம் செய்வார்கள் , ஏமாற்றும் குணம் ஜாதகனுக்கு வரலாம், , தொழில் ஏதாவது பிரச்சனையாகி கொண்டே இருக்கும் , தொழிலில் நேர்மை இருக்காது
  11. இங்கு நற்பலதுடன் இந்த அதிபதி இருந்தால் பிரச்சனை வராது, ஆனால் மூத்த சகொதிரன் நோயினால் துன்பம் அடையலாம், லாபம் குறைவு ஏற்ட்படலாம், ஆசைகள் நிறைவேறாது, எந்த ஒரு முடிவும் பிரச்சனை வரலாம் ,கடன் வாங்கி லாபம் எட்ட முற்படுவார்கள்
  12. அலைச்சல் அதிகமாகும், சரியான சாப்பாடு கிடைக்காது, நல்ல தூக்கம் வராது, போகத்தில் குறை ஏற்படலாம், படுக்கை அரை சுத்தம் இருக்காது ஆனால், கடன் வராது , உடல் வலிமை இழக்கலாம், வெளிநாட்டு பயணம் சுகபடாது, குறுக்கு வழியில் வேலைக்கு செல்வார்கள், அந்தரங்கமான வேளையில் ஈடுபடுவார்கள்                  

அன்பு மாணவர்களே ,குசியாக இருக்கிறதா, புரிவது போல தெரிகிறதா ,போக போக தெரியும் ,நிச்சயம் புலப்படும், கவலையை விடுங்கள் அடுத்தவாராம் ஒரு அற்புதமான பாடத்தின் மூலம் சந்திக்கலாம்
என்றும் அன்புடன் உங்கள்
ஆசிரியர்
நன்றி, வணக்கம்



ஐந்தாம் பாவகம்

பஞ்சமுஹன் ஜோதிட கல்வி மையம்
நாள் 8 -5 -2011  பயிற்சி குறிப்பு 3
அன்பு மாணவர்களுக்கு வணக்கம், இது வரை நான்கு PAAVANKALAI  படித்து விட்டீர்கள் நல்லது,
பல பாவகத்தை ஆராயும் போது தான் நமக்கு பல விசயங்கள் கிடைக்கும்
ஆனால் மெதுவாக தான் கிடைக்கும் , அவசரபடாதீர்கள், நிதானமாக செயல்படும் போது தான் நமக்கு பல விசயங்கள் பிடிபடும்.
இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகம் ஆய்வு செய்வோம்.


ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .
மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,
சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்
  1. இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்
  2. இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது
  3. இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.
  4. சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்
  5. வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்
  6. ஐந்தாம் அதிபதி ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,
  7. ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது
  8. ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்
  9. தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்
  10. ஐந்தில் சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்
சரி மாணவர்களே இனி ஐந்தாம் பாவகத்தில் மற்ற கிரகங்கள் நின்றாள் என்ன பலன் என்பதை கொஞ்சம் பாப்போம்
  1. ஐந்தாம் மிடம் சூரியன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சூரியனாக இருந்தாலோ ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்
  2.  ஐந்தாம் மிடம் சந்திரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சந்திரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல்  ஆர்வம் இருக்கும்,
  3. ஐந்தாம் மிடம் செவ்வாய்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் செவ்வையாக  இருந்தாலோ ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,
  4. ஐந்தாம் மிடம் புதன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் புதனாக இருந்தாலோ ஜாதகனுக்கு மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும், தத்துபுத்திர  யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன் அலி கிரகம் என்பதால் )
  5. ஐந்தாம் மிடம் சுக்கிரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சுக்கிரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்
  6. ஐந்தாம் மிடம் குரு  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன்  குருவாக  இருந்தாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )
  7. ஐந்தாம் மிடம் சனி  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சனியாக  இருந்தாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,
  8. ஐந்தாம் மிடம்  ராகு  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்
  9. ஐந்தாம் மிடம்  கேது  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக  நாட்டம் வரலாம்,  தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில்  thaamatham  உருவாகும்  .
  10. ஐந்தாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு
  11. ஐந்துகுடையவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்
  12. ஐந்துகுடையவன் ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம் உண்டு
  13. ஐந்தாம் பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது
  14. ஐந்தாம்  பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம்  நிற்ககூடாது
  15. விரயாதிபதி, அட்டமாதிபதி இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்
  16. ஐந்தாம் பாவகதில் சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்
  17. ஐந்தாம் பாவகம் பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்
  18. ஐந்தாம் பாவகம் ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில் நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்
  19. ஐந்தாம் அதிபதி நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்
  20. ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும் .
  21. ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு, 
  22. ஐந்தாம் அதிபதி நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது 
  23. ஐந்தாம் பாவகம் தொழில் ஸ்தானத்திற்கு துன்ப பாவகமாகும்
  24. ஐந்தாம் பாவகம் மனைவிக்கு லாப பாவகமாகும்
  25. ஐந்தாம் பாவகம் தாய்க்கு வாக்கு, தான பாவகமாகும்
  26. ஐந்தாம் பாவகம் தந்தைக்கு சௌரிய பாவகமாகும்
  27. இளைய சகொதிரனுக்கு தைரிய ,வெற்றி பாவகம், 
  28. ஐந்தாம் பாவகம் மூத்த சகொதிரனுக்கு களத்திற பாவகமாகும்  

ஜோதிட சொல் விளக்கங்கள்

ஜோதிட சொல் விளக்கங்கள்
  1. ராசி சக்கிரம்   -ஒரு குழந்தை பிறந்த பொழுது வான மண்டலத்தில் கிரகங்கள் எந்தெந்த ராசி மண்டலத்தில் நிற்கின்றது எனும் காட்டும் வரை படமே ராசி சக்கிரமாகும்
  2. அச்தங்கிதம் -- சூரியன் மிகவும் வெப்பம் மிகுந்த கிரகமாகும் , சூரியனை ராகு, கேது, தவிர மற்ற கிரகங்கள் நெருங்கும் பொது சூரியனின் அதீத வெப்பத்தால் அந்த கிரகம் எரிந்துவிடுகிறது அல்லது பலம் இழந்துவிடுகிறது    கீழ் கண்ட பாகை காலையில் கிரகம் வரும்போது அது நடக்கும் .
         சந்திரன் 12  *,   செவ்வாய் 17 , புதன் 14 , குரு 11  சுக்கிரன் 10  சனி 15
அஸ்தமனம் அடைந்த பாவக காரக பலன் கிடைக்காது

3  வர்கோத்தமம்
ஒரு கிரகமானது ராசியிலும் நவாம்சதிலும் ஒரே ராசியில் நின்றாள் அந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என பொருள் ஆகும் , வர்கோத்தமம் பெற்ற கிரகம் பலம் உள்ள கிரகம் ஆகும்.

4  பரிவர்த்தனை

ராசி சகிரதிலோ அல்லது நவாம்ச சகிரதிலோ இரு கிரகங்கள் தங்களது ஆட்சி வீடுகளில் மாறி நிற்பது பரிவர்த்தனை நிலை ஆகும் , உதாரணமாக சுக்கிரன் புதனின் மிதுன வீட்டில் நின்று அந்த புதன் சுக்கிரன் வீட்டில் நின்றாள் அது பரிவர்த்தனை பெற்றுள்ளது என்று பொருள் ,
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பலம் பெற்ற கிரகமாகும்

5  கிரக உத்தம்

ஒரு ராசியில் செவ்வாய் நின்று இருந்து அந்த செவ்வாய்க்கு பின் நின்ற கிரகங்கள் கிரக யுத்தம் அடைந்துள்ளது என்பதாகும் , உதாரணமாக செவ்வாய் பூரம் 1  பாதம் நின்று குரு மகம் 4  பாதம் நின்ற நிலையாகும்
இந்த செவ்வாய் சிம்ம ராசியில் அதிக பாகை கடந்துள்ளது .
கிரக யுத்தத்தில் தோற்ற கிரகம் பூரண பலனை தராது

6  ஆத்மா காரகன்

ஒரு ராசி கட்டத்தில் அதாவது 12  ராசிகளில் எந்த ஒரு கிரகம் அதிகம் பாதம் பெற்றுல்லுதோ அதுவே அந்த கிரகமே ஆத்மா காரகன் ஆவார் ,
இந்த ஆத்மகாரகன் ஜாதகனுக்கு நன்மை பயக்கும் கிரகமாகும்
இந்த கிரகம் திசை புதிகளில் நன்மை பயக்கும்.

7  சஸ்தாச்டகம்
சஷ்டி என்றால் ஆறு ஆகும் அஷ்டம் என்றால் எட்டு ஆகும்
ஒரு ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகம் நின்ற ராசி கட்டத்திற்கு ஆறாம் ராசியிலோ அல்லது எட்டாம் ராசியிலோ ஒரு கிரகம் நிற்கும் நிலை சஸ்தாச்டகம் ஆகும்
சஸ்தாச்டகம்  பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை கொடுக்காது , .

8  த்விர்தாம்சம்
ராசி சக்கிரத்தில் ஏதாவது ஒரு ராசியில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகத்திற்கு இரண்டிலோ அல்லது பன்னிரின்டிலோ ஒரு கிரகம் நிற்கும்  நிலை ஆகும்
இப்படி கிரகம் நிற்கும் நிலை த்விர்தாம்சம் ஆகும் . இந்த நிலா பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை தராது

9 . வக்கிரம்

வக்கிரம் என்றால் பின்னோக்கும் நிலை ஆகும்
ராகு கேதுக்கள் எப்போதும் பின்னோக்கியே செல்லும்
சூரியன் ,சந்திரன் எப்போதும் முன்னோக்கியே செல்லும் ,மற்ற கிரகமான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, வக்கிர நிலை அடையும், சூரியனை நோக்கி ஒரு குறிப்பிட்ட பாகை கலையில் நெருங்கும் பொது மேற்கண்ட கிரகங்கள் வக்கிர நிலை அடையும் , குறிப்பாக பூமியை நெருங்கும் சமயம் கிரகம் வக்கிர கதி அடைகிறது வக்கிர நிலை பெரும் கிரகம் உச்ச கிரக பலனை தரும்.

௧௩ ௦ பாகை முதல் 245  பாகை வரை சூரியனை நெருங்கும் பொது கிரகங்கள் வக்கிர கதி ஏற்படும்

10 .  கேந்திரம் 
1 ,4 ,7,10  வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் , இவை விஸ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகவும் பலமாக செயல்படும்

11, திரிகோணம்
1 ,5 ,9  வீடுகள் திரிகோணம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகள் லட்சுமி ஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகளில் நிற்கும் கிரகம் நல்ல சுபமான பலனை கொடுக்கும்   

12 . பணபரம்
25811  வீடுகள் பண்பர ஸ்தானமாகும்
இரண்டாம் வீடு தன உழைப்பினால் வரும் பணமாகும்
ஐந்தாம் வீடு குழந்தை மற்றும் அதிர்ஷ்டத்தினால் வரும் பணமாகும்
எட்டாம் வீடு எதிர்பாராத விளைவினால் வரும் பணமாகும்
11  மிடம் தான் செய்யும் தொழில் மூலம் பலவழிகளில் கிடைக்கும் பணமாகும்

13  உபஜெய ஸ்தானம்
361011  மிடம் உபஜெயச்தானமாகும்
இந்த இடத்து அதிபதிகள் எந்த ஒரு செயலிலும் வெற்றியை கொடுக்கும் அதிபதியாகும்.

14 . ஆபோக்லீமம்
பணபரதிர்க்கு அடுத்த வீடுகள் அதாவது 36912  ஆம் வீடுகள்
இந்த இடத்தில் உள்ள கிரகங்கள் வலிமை குறைந்து செயல் படும் ஆனால் 9  பாவகம் இதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் 10  பாவக அதிபதி இதில் இருக்க கூடாது

15 . மறைவு ஸ்தானங்கள்
36812  ஆம் வீடுகள் ஆகும் இந்த வீடுகளில் ஒருகிரகம் நின்றாள் அது பலம் இழந்து விடுகிறது , அதில் மூணாம் பாவகம் அரை பலத்துடன் செயல்படும்
      

சனி, 30 ஏப்ரல், 2011

கிரக காரகத்துவம்

கிரக காரகத்துவம்
சூரியன்
  1. தன்னம்பிக்கை
  2. நிர்வாகத்திறமை
  3. புகழ்
  4. தாராள குணம்
  5. இறக்கம்
  6. கருணை
  7. பிடிவாதம்
  8. முன்கோபம்
  9. தைரியம்
  10. அஞ்சா நெஞ்சம்
  11. வைராக்கியம்
  12. உடல் உஷ்ணம்
  13. நெருப்பு
  14. கண்கள்
  15. சிவா வழிபாடு
  16. இவரது நிறம் சிவப்பு ஆகும்
  17. இவர் சத்திரிய ஜாதியை சேர்ந்தவர், இவரது கல் மாணிக்கம் ஆகும்
  18. செந்தாமரை ,எருக்கன், காரம், அக்னி, சிவன், தாமிரம் ஆடுதுறை ஒருமாத ம சஞ்சாரம் ,
  19. பிற பெயர்கள் ஆதவன், ரவி, கதிரவன், சுடரோன், திவாகரன், தினகரன் ,தினமணி, பகலோன், வெண்சுடர், வெய்யோன் 
  20. தந்தை, வலதுகண், அரசன், அரசாங்கம், பிரதமர், வீட்டின் வலது jannal
  சந்திரன்

  1. புகழ், கற்பனை, சலனபுத்தி, அமைதி, கொள்கை பிடிப்பு, கலை உணர்வு , சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல். காதல்,
  2. குட்டை, வெண்மை, வைசிய ஜாதி, முத்து, நெல்தானியம் , புஷ்ப மலர், முருங்கை குச்சி, ஈயம், பார்வதி தேவி, இரண்டேகால் நாள்
  3. வேறு பெயர்கள் , அம்புலி, இந்து, கலாநிதி, குழவி,சோம,., மதி, தண்சுடர், திங்கள்,
  4. தாய், மாமியார், மனம், உணவுப்பொருள், இடதுகண், கலை, கற்பனை, உப்பு, சங்கு, குளியல் அரை, இடதுபக்க ஜன்னல், திருட்டு தனம் ,கள்ளத்தனம்,


செவ்வாய்
  1. முன்கோபம், ஆத்திரம், அவசரம், வீரம், கர்வம், ஆணவம், அகம்பாவம், முரட்டுத்தனம், வேகம், சுசுருப்பு, படபடப்பு, வீண்சண்டை, வாக்குவாதம், உணர்ச்சி வயப்படுதல், ஆதிக்க உணர்வு, பூமி காரகன், குருதிகாரகன், அஆதகாரகன், விபதுகாரகன், பூமிகாரகன்,
  2. உடன்பிறப்பு, ஆண்கிரகம், குட்டை, சிவப்பு,சத்ரிய ஜாதி, குருர குணம், பித்தம் ,தெற்குதிசை, பவளம், துவரை தானியம், செந்தாமரை, அன்னபறவை, செம்பு உலோகம், சுப்பிரமணியர், வைதீஸ்வரன் கோவில், ஒருமாதம் சஞ்சாரம்
  3. சகொதிரன், கணவன், காவல் துறை, வெட்டுக்காயம், தழும்பு, படுக்கை அரை, சுரங்கம், துப்பாக்கி, கத்திரி, கோடாலி,

புதன்
  1. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைசுவை, பொறுமை, வசீகர தன்மை, அறிவு, தந்திரம் கலகலப்பு, கோழைத்தனம் ,விதைகள், ஜோதிட தன்மை, சிற்பம், ராஜ தந்திரம் ,வேததம் , மந்திர திறமை,கல்விகாரகன்,
  2. தாய்மாமன், ஜோதிட பாசை, வைசிய ஜாதி, வாதம், பட்சிகள், பச்சைபயிறு, வெண்காந்தள் மலர், நாஉருவி குச்சி, பித்தளை, உவர்ப்பு, பட்சைபட்டு, மதுரை, ஒருமாதம்
  3. அருணன், கணக்கன், சௌமியன், பண்டிதன், மாலவன் புக்கு,
  4. கணக்கன், சட்டம், கழுத்து, தொண்டை,நாக்கு, தோட்டம், செய்திகள், தோள்பட்டை, மாமன் ,வியாபாரம் ,வித்தைகள், கல்வி arivu
குரு
  1. சாந்தம், பொறுமை, தெய்வநம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம், கடமை,கண்ணியம் நேர்மை, மனிதநேயம், பக்தி, பண்பாடு, மதகுருமார், ஆசிரியர், ,
  2. தனகாரகன், புத்திரகாரகன், ஆண்கிரகம், நேட்டையானவர், சமிஸ்கிரதம், சாமியார், பிராமண ஜாதி, புஸ்பராகம், கொண்டைகடலை, முல்லைமலர், அரசங்குச்சி, யானை, தங்கம், பிரம்மா, மஞ்சள், ஆலங்குடி, இருவருடம்
  3. வியாழன், அந்தணன், அரசன், ஆசான், சிகண்டி, அரசகுரு, தேவகுரு, பிருகஸ்பதி, மறையோன்,
  4. பக்தி, ஞானம், நீதிபதி, பிராமணன், பூஜை அரை, பசு, அமைச்சர், மூக்கு, நிர்வாகம், காசு புழங்கும் idam
சுக்கிரன்
  1. கலை,ஆடல், பாடல், நடிப்பு, அலங்காரம், ஆடம்பரம், காமகளியாட்டம், கலாரசிகர், மேன்மை, பயந்த சுபாவம், அமைதியான தோற்றம், கவர்சிகரமான பொருள், காதல், இன்பம்,
  2. களத்திரகாரகன், வாகனகாரகன், பென்கிரகம், சம உயரம், தெலுங்கு, வெண்மை, கிழக்கு, வைரம், மொச்சை, வெண்தாமரை, அத்திகுட்சி, கருடன், இனிப்பு, வெள்ளி உலோகம், மகாலட்சுமி, வெண்பட்டு, ஸ்ரீ ரங்கம், சாமியார் ,ஒருமாதம்
  3. வெள்ளி, மால், சுங்கன், அசுர குறு, சல்லியன், மலைகொள்
  4. மாணவி, சகோதிரி, காம,காதல், திருமணம், விந்து, வாசனை திரவியம், வங்கி, நகைத்தொழில், போதை பொருள்;, கேளிக்கை விடுதி, அழகு கவர்ச்சி,
சனி
  1. சோம்பல், பிடிவாதம், மந்தகுணம், நடுநிலமையான பேச்சு, துஷ்ட தனம், கீழ்த்தரமான பேச்சு, விகார கோபம், கல்நெஞ்சம்,
  2. ஜீவனகாரகன், ஆயுள்காரகன், அளிகிரகம், அந்நிய பாசை, கருப்புநிறம், சூத்திர ஜாதி, குருர குணம், மேற்குத்திசை, எல்தானியம், கருங்குவளை மலர், காகம் வாகனம், இரும்பு உலோகம், கருப்பு பட்டு, எமன் தேவதை, திருநள்ளாறு, இரண்டரை ஆண்டு
  3. அந்தகன், கரியவன், காரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன்,
  4. மூத் சகொதிரன், தாடை, மூட்டு, முழங்கால், சேமிப்பு அரை, கம்பளி ஆடை,
ராகு
  1. சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை
  2. தந்தை வலி பாட்டன், ஞானகாரகன், பென்கிரகம், நெட்டை, கருப்பு நிறம், அந்நிய பாசை, சங்கிராம ஜாதி, பித்த நோய், தென்மேற்கு , கொமேகதம், உளுந்து, மந்தாரை புஸ்பம், ஆடு வாகனம், புளிப்பு சுவை, பத்ரகாளி, கருப்பு வஸ்திரம், திருநாகேஸ்வரம், அரக்கர் தலை பாம்பு உடல் கொண்டவர்
  3. கரும்பாம்பு, நஞ்சு, மதிபகை,
  4. வாய் ,உதடு, முஸ்லீம், பாம்பின் வாழ், மோடிவித்தை, ராசாயணம், பிளாஸ்டிக், மலக்குடல், ரப்பர், காபிகொட்டை, லஞ்சம், விபத்து, மரணம், விதவைதனம், கடத்தல், சட்டத்திற்கு புறம்பான தொழில்
கேது
  1. ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை ,வேதாந்தம்,
  2. தைவளிபாட்டன், மோட்சகாரகன், ஆண் அலி, நெட்டை, அன்னியபாசை, சிவப்பு நிறம், சங்கிராம ஜாதி, பித்த்கநோய், வடமேற்கு திசை வைடூரியம் கொள்ளு தானியம் செவ்வரளி, தர்பை, சிங்கம், துருக்கள் , இந்திரன், பலவண்ண நிறம், காளகஸ்தி, பாம்பின் தலை ,அரக்கர் உடல்
  3. செம்பாம்பு, கதிர்பகை, சித்தி, ஞானி
  4. தாய் வலி பாட்டன், நரம்பு, முடி, மர்ம உறுப்பு, மாந்திரீகம், கோயில், மின்கம்பி, தியான அரை, மருத்துவ அரை, மூலிகை, சந்நியாசம், புகை மயக்கம்

சனி, 9 ஏப்ரல், 2011

பஞ்சாங்கம்

மாணவர்களுக்கு வணக்கம்
பழைய புதிய மாணவர்களை அன்போடு வாழ்த்துகிறோம்

நமது நாமக்கல் மையத்தில் படித்த மாணவர்கள் சிறந்த மாணவர்களாக வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

அடிக்கடி எங்களை தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் ஜோதிட அறிவை விருத்தி செய்துகொள்ளுங்கள்

மிகுந்த சிரமம் எடுத்து கலந்து கொண்டதற்கு மையத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்

இந்த கரவருடத்தை நாம் மிகுந்த சந்தோசமாக வரவேற்று நல்வழிபடுத்துவோம்

கரவருடம்
கதகலயுகாதிபதி  5112
கதசாளிவாகன 1933 -34
கொல்லம் 1186  -87
பசலி 1420 - 21
ஹிஜ்ஜிரி -1432 -33
விக்கிரமசகாப்தம் 2068 -69
திருவள்ளுவர் 2042 -43
பிரபாவதி 25 வது

நவனாயகர்கள்
ராஜா- சந்திரன்
மந்திரி - குறு
சேனாதிபதி - புதன்
அர்காதிபதி- புதன்
சசியாதிபதி - சனி
ரசாதிபதி- சந்திரன்
தானாதிபதி- சுக்கிரன்
மேகாதிபதி -புதன்
நீரசாதிபதி -சனி



பஞ்சாங்கம்
இந்த சித்திரை மாதத்தில் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.








webdunia photo WD



ஆதிசங்கரர் அவதரித்தது பஞ்சமி திதி. ராமானுஜர் அவதரித்தது திருவாதிரை நட்சத்திரத்தில். சில ஆண்டுகளில் இருவரது ஜெயந்தியும் ஒரே நாளில் வருவதும் உண்டு.



சித்திரை வருடப்பிறப்பு கேரள மக்களால் ‘விஷு’ என்றழைக்கப்படுகிறது. விஷுவுக்கு முதல் நாள் ஓலை வேய்ந்த வீடுகளில் பழைய ஓலைகளை நீக்கி புது ஓலை வேய்வார்கள். மற்ற வீடுகளில் வர்ணம் பூசுவர். வீடுகளை பல விதங்களிலும் அலங்கரிப்பார்கள்.



விஷுவுக்கு முதல் நாள் இரவில் ஒரு பெரிய தட்டில் அரிசியை பரப்பி அதில் நவதானியங்கள், பொன் நகைகள், புத்தகங்கள், உடைத்த தேங்காய்கள், கொன்றை மலர், வெள்ளரிக்காய், மாவடுக் கொத்து, தின்பண்டங்கள் ஆகியவற்றை அழகாய் அடுக்கி படுக்கையறையில் வைத்து விடுவர்.

விஷு நாளில் பொழுது விடியும் முன்பாக விழி திறவாமல், முதல் நாள் வைத்த தட்டை கண்டுவிட்டு பிறகு மற்ற பொருட்களை காண்பர். இதனை ‘விஷுக்கனி காணுதல்’ என்பார்கள். மலரும் புத்தாண்டில் விழிகளை திறந்ததும் சுபமான பொருட்களை காண்பதால் நம் ஆக்கபூர்வமான கனவுகள் நனவாகும் என்று நம்புகின்றனர். இவ்விதம் விஷுக்கனி காண்பதை 'மங்களத்திண்ட ப்ரதீஷ' என்றழைக்கின்றனர்.



சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு.




ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி கட்டி பறக்கும். லக்கினத்திற்கு 9-ல் சுக்கிரன் (திரிகோணத்தில்) இருப்பதால் பெண்கள் செல்வாக்கு,கல்வி,உத்தியோகம் பல மடங்கு உயரும்.



லக்கினத்திற்கு 2-க்குடைய சந்திரன் 5-க்குடைய சுக்கிரனால் பார்க்கப்படுவதால் பெண்கள் பெருமை அடையும் வருடம் இது.



கேது லக்கினத்தில் இருப்பதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆனால் அதை சனி 10-ம் பார்வையாக வக்கிரம் பெற்று பார்ப்பதால் புது புது வியாதிகள் தோன்றும்.



அன்னிய விரோதங்கள் சூழ்ச்சிகள் சனியால் முறியடிக்கப்படும். அன்னியர்கள் இனி அடக்கி வாசிப்பார்கள். பொதுவாக லக்கினத்தில் கேது, 4-ல் சனி, 7-ல் ராகு, 10-ல் செவ்வாய்,புதன் குரு, இப்படி கேந்திரங்களில் எல்லாம் கிரகங்கள் இருந்தால் யோகமான காலகட்டம் இது.



8-க்குடைய சனி 4-ல் வக்கிரம் பெற்றதால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணும்.



சுக்கிரனை சந்திரன் பார்வை செய்வதால், போதும் போதும் என்றளவிற்கு மழை கொட்டி தீர்க்கும். வெள்ளபெருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.



லக்கினத்திற்கு 11-ல் சூரியன். மருத்துவ துறை புதிய சாதனை செய்யும். வாகனங்கள் இயந்திரங்கள் விலை உயரும். கலைத்துறைக்கு பொற்காலம். அழகு சாதனம், துணிமணிகள் ஏற்றுமதி பெருத்த லாபம் தரும்.



குரு சேர்க்கை அல்லது பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். இயற்கை சீற்றங்கள் அத்தனையும் குருவால் சற்று சாந்தப்படுத்தப்படும்.



பொதுவாக இந்த “கர“ வருடம் நாட்டு மக்களுக்கு பெரும் நன்மையை தன் கருனையால் வாரி வழங்கும்.





கரவருட ராசி பலன்
கர வருடம், 14.4.2011 வியாழக்கிழமை காலை மணி 11.27க்கு சுக்ல பட்சத்தில் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில், நவாம்சத்தில் மீன லக்கினம், மிதுன ராசியில், கண்மம் நாமயோகம், பாலவம் நாம கரணம், அமிர்தயோகம் நேத்திரம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில், மூன்றாவது சாமத்தில், ஆந்தை நடை பயிலும் நேரத்தில், கேது தசையில், குரு புக்தி, சூரியன் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் பிறக்கிறது.




கர வருஷத்திய பலன் வெண்பா:

‘கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்

உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்&நிறைமிகுத்து

நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்

பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.’



வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார்.





இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்களை விட, விதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகழடைவார்கள்.
மக்கள் சுகமாக இருப்பார்கள்
மந்திரியாக குரு வருவதால் அரசியல் சூழ்நிலை பலவித வடிவங்களை எடுக்கும். எதிர் கருத்தும் பலத்து ஒலிக்கும்.
மழை நன்கு வரும், செல்வா விருத்தி உண்டாகும் ,நல்ல ஆட்சி நடக்கும்
அர்க்காதிபதி, மேகாதிபதி மற்றும் சேனாதிபதியாக புதன் வருவதால் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுக்குமிடையே நிலவி வரும் பனிப்போர் விலகும்
அதிகமான காற்றும் மழையும் உண்டாகும் ,விலைவாசி குறையும், மழை அதிகமாகும்



மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை அதிகரிக்கும். ஆனாலும், பாலியல் தடுமாற்றங்களும் பெருகும். சுதேசித் தொழில்கள் மீண்டும் வளரும். என்றாலும் சுய தொழில் தொடங்குவோர் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். சூறாவளிக் காற்றால் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டும். வெள்ளச் சேதம் அதிகரிக்கும். கந்தக பூமியும், பாலைவனமும் செழிக்கும்.





சேனாதிபதியாக புதன் வருவதாலும் 20.12.2011 வரை கன்னியில் சனி நீடிப்பதாலும் சீனா, இலங்கை நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்

இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும். நேபாளம், பாகிஸ்தான் மூலமாகவும் தீவிரவாதிகள் நுழைவார்கள். ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சூரியன் வருவதால் வெயிலின் சீற்றம் கடுமையாக இருக்கும்.





அயல்நாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப வேண்டி வரும். பெட்ரோல், டீசல் விலை உயரும். பிளாட்டினம் மற்றும் கனிம, கரிம வளப்பகுதி கண்டறியப்படும்.

தானியாதிபதியாக சுக்கிரன் வருவதால், மழையால் உணவுப் பொருட்கள் சேதமடையும். தானியக் களஞ்சியங்களில் தீ விபத்து உண்டாகும். அரிசி, சர்க்கரை விலை உயரும். அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் உண்டு. பூமி விலை உயரும். கட்டிடங்கள் விலை சற்றே குறையும். தங்கம் விலை உயரும். ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை குறையும்.
நீரச அதிபதியாக சனி வருவதால் இரும்பு பொருள் விலை குறைந்து மக்களுக்கு பலன் ஏற்படும், தொழில் முன்னேற்றம் வந்து விடும்



கர ஆண்டின் மகர சங்கராந்தி தேவதையாக வணஜீ என்ற ராட்சசன், எருமைக்கிடா வாகனம் ஏறிவருவதால் உலகெங்கும் மக்களிடையே மரண பயம் உண்டாகும். சாலை விபத்துகள், விமான விபத்துகள் அதிகரிக்கும். பழிவாங்கும் குணமும், குறுக்கு வழியில் முன்னேறும் போக்கும் அதிகரிக்கும். உள்நாட்டுக் குழப்பம், உள்குத்து வேலைகள் பரவலாகக் காணப்படும். உலகில் புகழ்பெற்ற வியாபார மையங்கள், சுற்றுலா மையங்கள், அரண்

மனைகள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கும். வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் ஓரளவு செழிப்படைவார்கள்.



இந்த வருடம் முழுக்க சுக்கிரன் வக்கிரமடையாமல் காணப்படுவதால் சினிமா துறை சூடுபிடிக்கும். புதிய படங்கள் அதிகம் வெளியாகும். தொலைக்

காட்சிகள் அமைப்பில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்று போன படங்களும் வெளியாகும் என்றாலும், 21.11.2011 முதல் சனி பகவான் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமர்வதால் பெண் கலைஞர்களுக்கு சவாலான காலகட்டமாகும். விவாகரத்து சம்பவங்கள் அதிகரிக்கும். முன்னணி நடிகர்கள், போட்டி காரணமாக பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். புதுமுகங்கள் பிரபலமடைவார்கள். வியாபாரிகளையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்

படுத்த கடுமையான சட்டம் வரும்.



18.4.2011 முதல் 16.7.2011 வரை மற்றும் 23.7.2011 முதல் 17.10.2011 வரையிலான காலகட்டங்களில் அரசியல் குழப்பங்கள், என்கவுன்ட்டர், இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். 15.6.2011 அன்று கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் மேஷம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய குறைவும், பண இழப்பும் ஏற்படும். 10.12.2011 அன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் தமிழறிஞர்கள், மூத்த பேராசிரியர்கள், கலைத்துறையினர் பாதிக்கப்படுவார்கள்.





ரிஷப ராசிக்காரர்களுக்கு ரத்தம், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும்.

சிம்ம ராசியிலேயே செவ்வாய் 4.11.2011 முதல் 14.8.2012 முடிய நீடிப்பதால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெள்ளப் பெருக்கால் பூமி சுருங்கும். காவல் துறையில் களை எடுப்பு அதிகரிக்கும். 7.2.2012 முதல் 10.4.2012 வரை செவ்வாய் வக்ரமாவதால் நிலநடுக்கம் உண்டாகும்.





மின்வெட்டை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மின்சார கட்டணம் உயரும். காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிக்கும். அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்னை வெடிக்கும். மீனவர்கள் பாதிப்படைவர்.





7.9.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரமாவதால் வங்கிகள் தடுமாறும். வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும். கர ஆண்டு தொடக்கம் முதல் 10.6.2011 வரை மற்றும் 5.2.2012 முதல் கர வருடம் முடியும் வரை சனி வக்ரமாவதால் அரசியலில் குழப்பங்களும், சுரங்க விபத்துகளும் அதிகரிக்கும்.



பரிகாரம்: இந்த கர வருடத்தில் மனோகாரனாகிய சந்திரனை இரண்டு கிரகணங்கள் தாக்குவதாலும், ஆத்மகாரனாகிய சூரியனின் வீட்டில் செவ்வாய் 4.11.11 முதல் ஏறக்குறைய முக்கால் வருடம் சிம்மத்திலேயே நீடிப்பதாலும் மக்களிடையே மனோபீதியும், எதிர்மறை சிந்தனையும் நிலவும்.





இதிலிருந்து விடுபட, விக்னங்களை விரட்டும் விநாயகரை, வெற்றிலை மீது மஞ்சளால் பிடித்து வைத்து அறுகம்புல் சாற்றி வணங்குங்கள். பிரிந்துபோன சொந்தங்களிடம் மனம்விட்டுப் பேசி உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். விரோதப் போக்கு விலகும்.