ஞாயிறு, 29 மே, 2011

*ஆழ்மனதைப்

*ஆழ்மனதைப் பயன்படுத்தி நமது லட்சியங்களை அடைவது எப்படி?

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியும்.அதற்கு
வேண்டியதெல்லாம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலை 15 நிமிடம் மற்றும்
மாலை 15 நிமிடம் ஒரு குறிப்பிட்ட தியானம் செய்ய வேண்டியதே!

அது எப்படி தியானம் செய்தால் கோடீஸ்வரராக முடியும்.நாம் ஒவ்வொருவரும்
கடவுள்தன்மையோடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் அதை நாம் உணராமல்
இருக்கிறோம்.
**www.alphamindpower.net* <http://www.alphamindpower.net/>* என்ற
இணையதளத்திற்குச் செல்லுங்கள்.இது சென்னையிலிருந்து செயல்படும் ஒரு தமிழ்
இணையதளமாகும்.
இதில் கூறப்பட்டுள்ள நாளில் உங்களுக்கு அருகிலுள்ள நகரில் ஆல்பா தியானப்
பயிற்சியில்(தமிழில் அல்லது ஆங்கிலத்தில்) கலந்து கொள்ளுங்கள் ।
பயிற்சிக்கட்டணம் உண்டு;கலந்து கொண்ட பிறகு உங்களது நியாயமான ஆசைகள் நிஜமாகும்
என்பதை உணரலாம்.
எந்தெந்த ஆசைகள் நிறைவேறும்?
1.ஐ.ஏ.எஸ் ஆவது
2.மாநிலத்திலேயே முதல் மாணவராவது
3.ஒரு கோடி ரூபாய்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பது
4.குடிக்கும் கணவன்/சகோதரன்/அப்பாவை குடிக்காமல் நிறுத்தச்செய்வது
5.குடும்பப்பிரச்னைகள் தீர்வது
6.கடன் தீர்வது
7.நீண்டகால உடல் அல்லது மன நோய் தீர்வது
8.செய்யும் வேலையில் இன்னும் கவனமாக செயல்பட்டு பதவி உயர்வுகிடைப்பது
9.எல்லோரும் வெறுக்கும் நம்மை நேசிக்கச்செய்வது
10.பொருளாதார வளம் அடைவது
11.இன்னும் நிறைய
இதெல்லாம் எப்படி சாத்தியம்?நான் நம்ப மாட்டேன் எனக்கூறுகிறீர்களா?
இந்த அறையில் டாடா, ரிலையன்ஸ்,ஓடபோன், ஏர்செல், ஏர்டெல்,எம்.டி.எஸ் மற்றும்
செல் ஒன்னின் செல்போன் அலைகள் இருப்பது உண்மைதானே!அவற்றைப்பார்க்க முடியுமா?
உரிய செல் எண்ணுடன் செல்போனை ஆன் பண்ணினால்தானே உணர முடியும்.அது போலத்தான்.
இருந்தாலும் சுருக்கமாக ஏற்கனவே இந்த ஆன்மீகக்கடலில் விளக்கியுள்ளேன்.
மீண்டும் சுருக்கமாக:
மனித மனம் இரண்டு பெரும் பிரிவுகளாக செயல்படுகின்றன.ஒன்று மேல் மனம்.இதற்கு
ஓரளவே சக்தி உண்டு.பெயர்கள்,நமது வீடு,நமது அலுவலகம்,படிக்கும்/படித்த
பள்ளி/கல்லூரி இவை ஞாபகமிருக்கும்.
மற்றது ஆழ்மனம்.இதைப் பற்றி நாம் அதிகம் அறிய வில்லை.இதன் சக்தி
எல்லையற்றது.நாம் மனம் இதயத்தில் இருப்பதாக நம்புகிறோம்.ஆனால் நமது மனம் நமது
வலப்பக்க மூளையில் இருக்கிறது.இதற்கு திரைப்படம் போலக் காட்சிகள் மட்டுமே
தெரியும்.இது முழுக்க உணர்வுகளால் மட்டுமே ஆனது.
நாம் பிறந்ததுமுதல் மரணம் அடையும் வரை நமது வாழ்வில் நடந்த நடக்கும்
நடக்கப்போகும் அத்தனை சம்பவங்களும் இங்கே பதிவாகிக்கொண்டே
இருக்கின்றன.எதையெல்லாம் நாம் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அது
மேல்மனதைக்கடந்து ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது.
எதெல்லாம் ஆழ்மனதில் பதிவாகிறதோ(அது நல்ல விஷயமோ கெட்டவிஷயமோ எதுவானாலும்),அதை
ஆழ்மனமானது விண்வெளியில் உள்ள பிரபஞ்சமனத்திடம் அஞ்சல் செய்துவிடுகிறது.
பிரபஞ்ச மனதில் பதிவான உடனே அந்தக் காட்சி நமது நிஜ வாழ்க்கையில்
நிகழ்ந்துவிடுகிறது.

நாம் காலையில் தூங்கியெழும் சில நிமிடங்களுக்கு முன்பாக பால்க்காரனின்
சப்தம்,பறவைகளின் ஒலி முதலியவற்றைக் கேட்டிருப்போம் இல்லையா? அதுதான் நமது
ஆழ்மனம் விழித்திருக்கும் நேரம்.
அதன்பிறகு ஒருநாளில் அடிக்கடி நமது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வரும்.ஆனால் அது
எப்போது என்பதை நம்மால் உணர முடியாது.
இந்த ஆல்பா மைண்டு தியானத்தில் நாம் விரும்பும்போது நம்மால் நமது ஆழ்மனதை
திறக்கச் சொல்லித்தருகிறார்கள்.அப்படித் திறந்து நமது நியாயமான ஆசை/லட்சியங்களை
ஆழ்மனதில் பதியச்செய்கிறார்கள்.நமது லட்சியங்களை நிறைவேற்ற நமது ஆழ்மனம்
உதவுகிறது.
இந்த ஆல்பா தியானப்பயிற்சி 5 லெவல்களைக் கொண்டது.
இதில் 1ஆம் லெவலை மட்டுமே தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும்.நாம் கோடீஸ்வரராக
முடியும்.இப்படி கோடீஸ்வரரானவர்கள் பற்றி அறிய www.alphamindpower.net-இல்
Testimonial பகுதியைப் பார்க்கவும்.
குறிப்பு:எல்லோரின் ஆசையும் கோடீஸ்வரராவது என்று இருக்காது.சிலர் அரசுத்
தேர்வில் வெற்றி பெறுவதாக இருக்கலாம்.சிலர் காதலில் வெற்றியாக இருக்கலாம்.சிலர்
சினிமாவில் ஜெயிப்பதாக இருக்கலாம்.சிலர் வெளிநாட்டில் குடியேறுவதாகக்கூட
இருக்கலாம்.உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் அது நியாயமாக இருக்கவேண்டும் அது
மட்டுமே நிபந்தனை.முயன்று பாருங்கள்.
எனது ஆல்பாதியான பயிற்சிப்படி எனது நியாயமான ஆசை ஒன்று நிறைவேற மூன்று மாதங்கள்
ஆனது.மூன்றாவது மாதத்திலிருந்து எனது ஒரு லட்சியம் நிறைவேறுவதற்கான அடையாளங்கள்
தெரிய ஆரம்பித்தன.நான் ஒன்றரை வருடங்களாக ஆல்பா தியானம் செய்து வருகிறேன்*
 நன்றி
அடுத்ததாக நான் கற்றுக்கொண்டது ஈசா த்யானம். இது ஸ்ரீ ஜக்கிவாசுதேவ்ஜி என்பவரால்
நடத்தப்படுகிறது. ஈசா என்றால் ஒரு ஆளும் சக்தி எனலாம். அதற்கு உருவமில்லை.
ஆனால் கடவுள் தன்மை உண்டு. அதற்கு உருவம் கொடுத்தால் ஈச்வரன் ஆகிறான்.
ஜகதீசா என்றும் ஜகதீச்வரன் என்றும் நாம் கூப்பிடுகிறோம். ஈசா த்யானத்தில் நாம்
தீக்ஷை எடுத்து கொள்ள வேண்டும். அங்கு சூன்ய தியானம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சூன்யம் என்றாலே ஏதும் அற்ற நிலை. அதை வேறு ஒன்றிடம் ஒப்பிடமுடியாது.
மனதை ஒருமைப்படுத்தி எண்ணங்கள் வந்தாலும் வலிய தடுக்காமல் ஓடவிட்டு பின் ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் போது சூன்யதியானத்தில் ஈடுபடவேண்டும்.
எல்லா தியானத்திற்கும் முடிவு ஒன்றுதான். எப்படி பல நதிகளின் நீளம் திசைகள்
மாறி இருந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். சில நதிகள் சுலபமாக கலக்கிறது.
சிலமேடு பள்ளம் ஏறி வந்து பின் கலக்கிறது.
நாம் குண்டலினி தியானத்தை எடுத்துக் கொண்டால்... ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள உயிர் சக்தி குண்டலினி தான். அதைப் பாம்புடன் ஒப்பிடுகிறார்கள்.
பாம்பு அசையாமல் இருக்கும் போது நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கொஞ்சம் நகர ஆரம்பிக்கும் போது
தான் பாம்பு இருப்பதே நினைவுக்கு வரும். அதே போல் குண்டலினி அசையும் போதுதான் நாம் அந்த சக்தியை
உணரமுடியும். அது நம் ஏழு சக்ரங்களைத் தாண்டி கடைசியில் ஸஹஸ்ராரா சக்ராவைத் தாண்டும்போது
தான் பேரானந்தம் கிடைக்கிறது. அந்த குண்டலினி சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அசைய வைத்து
மேலே ஏற்றுவது ஒருவிதமான யோகம் வேதாத்திரி
மஹராஜ் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த நம் பாபங்கள்
விலகி தியானம் விரைவில் சித்திக்கும் என்கிறார். அங்கு குருவே குண்டலினியை எழுப்பி விடுகிறார்கள்
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அவர்கள் பயிற்சியில்
ஸோஹம் என்ற சொல்லை ஜபித்து நம்மை தயார்
ஆக்குகிறார். ஸோஹம் என்றால் நான்தான் அது”
என்று அர்த்தம் என நினைக்கிறேன் அதாவது நான் தான்
ப்ரும்மம் “என்று சொல்லப்படுகிறது அதை சுதர்சனக்ரியாஎன்கிறர்கள். உள்மூச்சு,வெளிமூச்சு என்று மாறி மாறி விட்டுக்கொண்டே பயிற்சி செய்ய
வியாதிகளே அண்டுவதில்லை. இதை ஆத்ம க்யான யோகா என்கிறர்கள்.
ஆல்ஃபா த்யானம் மிக எளிமையான ஒன்று. அதை நடத்துபவர் டாக்டர் விஜயலக்ஷ்மி …கையில் ஆல்பா முத்திரை எடுத்து, தியானம் செய்ய வாழ்க்கையில் அடையாதது ஒன்றுமில்லை. தியானத்தின் போது பிரபஞ்சத்தின் சக்தியை
ஒளியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரவவிட்டு நம்மை சுற்றி சக்தி காப்பு போட்டுகொண்டு தியானம் ஆரம்பிக்க வேண்டும்
ஆழ்மனசக்திதான் மிகப்பெரிய சக்தி. அதை உணர்ந்து அதை திறக்கும் வழிதான் ஆல்பா தியானம். அப்படி திறந்து விட்டால்
டால் வெற்றி, தெளிந்த சிந்தனை, நிம்மதி எல்லாம் கிடைக்கும்.
அடுத்தது பிரமிட் தியானம் நம் மூக்கை பிரமிட் போல பாவித்து
கைகளைக்கோர்த்து கால்களை ஒன்றன் மேல் வைத்து நம் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் உள்மூச்சு வெளிமூச்சு விடுவதை கவனமாக அனுபவித்து நம்மால் முடியும் வரை செய்யலாம் இதை
ந்டத்துபவர் டாக்டர் பத்ரிஜி .பிரமிட்குள் நிறைய விஷயங்
கள் உள்ளன பின்னால் அதை பற்றிச்சொல்லுகிறேன்
இதே போல் மஹெஷ் யோகி நடத்தும் தியானமும்
சிறப்பாக உள்ளது இன்னும் பல வகை தியானம் இருக்கின்றன. விபாசனா தியானம், காயத்திரி தியானம் சித்த சக்தியின் த்யானம் போன்றவைகள். எழத ஆரம்பித்தால் ப்ட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
எல்லாவற்றிலும் சுலபமான தியானம் என்னவென்றால் நாமஸ்மரணம் கடவுக்காகவே பாடும் இசை.
மும்மூர்திகளான தியாகராஜர், தீக்ஷதர், ச்யாமா
சாஸ்திரிகள் தங்கள் பாட்டுக்களினாலேயே கடவுளை
கண்டனர். சங்கீதத்தையே தியானம் ஆக்கினார்கள்
மீராபாய் க்ருஷ்ண்ரிடமே கலந்து விட்டாள்
வள்ளலார் ஜோதியிலேயே சக்தியைக் கண்டார்.
முழு சமர்ப்பணத்துடன் செய்யும் தொழில், எல்லாவேலைகளிலும் கடவுளைக் காண்பது என்பது எல்லாமே த்யானம்தான்.
கவிஞர் பாரதி சொல்கிறார்
"எண்ண்மிட்டாலே போதும்…………..
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதைவுள்ளுவதே போதுமடா
காவித்துணி வேண்டா, கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமனை எய்வதற்கு,
சிவமென்றேயுள்ளதெனச் சிந்தை செய்தால்
போதுமடா"
நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை ஒன்றே
போறுமடா.”
பகவான் பாபா சொல்கிறார் " எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்"
முடிவாக நான் சொல்வது

அன்பு உயர பண்பு உயரும்.
பண்பு உயர ஒழுக்கம் உயரும்
ஒழுக்கம் உயர,தியானம் வளரும்
தியானம் வளர ஒளி மிளிரும்,
ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் .
வாழ்வு ஓங்க.சாதனை ஓங்கும்
சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………
விசாலம்
விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-

            1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

            2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

            3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

            4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

            5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

            6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :

            1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

            2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும்     தன்மை அதிகரிக்கிறது.

            3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.

            4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
'தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப்
பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக
இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப்
பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட
நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை
நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம்
வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும்
பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த
நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய
வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும்
என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க
அதிகரிக்க என்ன ஆகும்?  நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே
அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள
அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே
இருக்கும்.
       அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத்
தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த
அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை
நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச்
சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

       "படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம்
கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும்
வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு
பயிற்சிதான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக்
காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம்
ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில்
ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச்
சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும்
வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
சின்னக் குழந்தைகளின் மூளை அலைகள் தீட்டா நிலையிலும், முதியவர்களின் மூளை அலைகள் பீட்டா நிலையிலும் உள்ளது என்பதை முந்திய பாராக்களில் படித்த போது தீட்டா, பீட்டா நிலை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைப் புரிந்து கொண்டால் மூளை பற்றிய பல முக்கிய விஷயங்கள் நமக்குப் புலப்படும்.

நமது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது.

மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.

அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.

மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.

(தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.)

மூன்றாவது வழி : எதிர்காலத்திற்குச் செல்லுங்கள்

உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

பத்து வருடம் கடந்த இப்போதைய புதிய சூழ்நிலையில் உங்களது பிரச்சினை மிகவும் பழையது. அதை விருப்பத்துடன் நினைத்துப் பாருங்கள். அதைக் கடந்து வந்து பத்து வருடம் ஆகி விட்டதல்லாவா? அதை எப்படித் தீர்த்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை மிக்க ஓய்வான நிலையில் அல்லது தியானத்தின் போது அல்லது ஹிப்நாடிஸ நிலையில் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களது இன்றைய பிரச்சினை தீர வழி கிடைக்கும்!

நான்காவது வழி: உரக்கச் சொல்லுங்கள்

இந்த வழி புதிய மூளை தொடர்புகளையும் நெட்வொர்க்கையும் செயல்பட வைக்கும். பார்வையை விரிவுபடுத்தும். படைப்பாற்றலை மேம்படுத்தும்.

ஜெர்மானிய கவிஞரும் எழுத்தாளருமான கதே உரக்கப் படிப்பதன் மூலம் எண்ணப் பொறிகளைப் பெறுவது வழக்கமாம். தன்னுடைய மனக் கற்பனையில் தோன்றிய ஒரு நண்பருடன் அவர் உரக்கப் பேசுவாராம். தன்னுடைய கதையின் கரு, அதில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உரக்கச் சொல்வாராம். இதுவே ஆழ்ந்த அறிவையும் சிறந்த கற்பனையையும் தனக்குத் தந்ததாக அவர் நம்பினார். இந்தக் கற்பனை யதார்த்தத்தையும் அவரது எழுத்துக்களில் புகுத்தியது.
தமிழ் எழதி
இப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +g அழுத்தவும்) அல்லது இதை
சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Latest topics
» திருவள்ளுவரை பற்றி சில தகவல்கள்!
by Admin Today at 9:39 am

» பலிபீடம் எனபது
by Admin Today at 9:29 am

» தன்னை உணர்ந்தபின்!
by agnilingam Sat May 28, 2011 10:13 pm

» பதினெட்டு!
by agnilingam Sat May 28, 2011 10:03 pm

» காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும் காட்டும் குரு இல்லாமல் ஞானம் கண்டரியலாகாதே!
by agnilingam Sat May 28, 2011 10:01 pm

» பார்வையாளனாய் இரு! எதையும் உருவாக்காதே! எதையும் மறுபடியும் உருவாக்காதே!
by agnilingam Sat May 28, 2011 9:58 pm

» சீவன் சிவலிங்கம்!
by agnilingam Sat May 28, 2011 9:56 pm

» போகரும் புலிப்பாணி பரம்பரையும்!
by agnilingam Sat May 28, 2011 9:55 pm

» நோயின்றி நீடித்த ஆயுளை பெற!
by agnilingam Sat May 28, 2011 9:52 pm

» விலகி போவார்கள்
by துறவி Sat May 28, 2011 1:37 pm

» மனிதர்களை விட நாங்கள் மட்டமா?
by sriramanandaguruji Sat May 28, 2011 6:40 am

» மனிதர்களை விட நாங்கள் மட்டமா?
by sriramanandaguruji Sat May 28, 2011 6:40 am

» உண்மையான பட்டாபிஷேகம்! -உமா
by துறவி Fri May 27, 2011 1:53 pm

» காக்கும் கால பைரவர்!
by துறவி Fri May 27, 2011 1:49 pm

» எடு வேப்பிலையை! அடி பேயை!!
by sriramanandaguruji Fri May 27, 2011 7:17 am

» அலங்கார முட்டாளுக்கு அழகி பட்டம்
by sriramanandaguruji Thu May 26, 2011 6:44 am

» அருணாசல மகிமை
by Admin Wed May 25, 2011 9:03 pm

» திருநீர் அணிவது எதற்காக?
by லெட்சுமணன் Tue May 24, 2011 1:17 pm

» கனவாகிப்போன புதையல்
by லெட்சுமணன் Tue May 24, 2011 12:54 pm

» காடு வரை கூட வருவது
by sriramanandaguruji Tue May 24, 2011 5:12 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]
Alexa Certified Traffic Ranking for tamilhindu.net

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

View previous topic View next topic Go down







தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

Post by Admin on Sat Aug 14, 2010 3:08 pm

கண்ணுக்குத்தெரியும் உடல், கண்ணுக்குத் தெரியாத மனம், அறிவு இவற்றை எது இணைக்கிறது அப்படின்னு பார்த்தோம்னா எந்த சந்தேகம் வேண்டியதில்லை மூளைதான் அது.:))

மனதில் ஏற்படும் மாற்றங்கள் தியானத்தாலும் வந்திருக்கலாம், வேறு காரணங்களினாலும் வந்திருக்கலாம். சாட்சி இல்லை. நிரூபிக்க முடியாது. வேண்டுமானால் நீயும் அனுபவித்துப்பார் என்றுதான் சொல்ல முடியும்.

முறையாக தியானம் செய்தால் மூளையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் அறிவியல் மூலம் நிரூபிக்க முடியும் அல்லவா..இது குறித்த அலசல் இது..

மூளையைப்பற்றி பொதுவாக ஆராய்ச்சிகள் பல நடந்திருந்தாலும் குறிப்பாக 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ட்ரின் மூளையின மின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதை அளந்து காட்டியதற்காக நோபல்பரிசு பெற்றார்.

மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.

ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு ஒன்றிலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.

ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் ஏழுவரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.

உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எழுமுதல் பதினாலு வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.

விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதினாலிலிருந்து இருபத்தி ஒன்று வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம். பதினாலிலிருந்து இருபத்திஒன்றுவரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை

அதேசமயம் இருபத்திஒன்றுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.

எனவேதான் மூலையின் அலைகளை நாம் ஏழு முதல் பதினாறு வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும்.

பீட்டா(14-21), ஆல்பா(7-14),தீட்டா(4-7), டெல்டா (1-4) மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!

இப்போது தீர்மானம் செய்து செயல்படுத்துங்கள். எந்த மனோநிலை தேவை, அதை எப்படிப்பெறுவது என ....இது உங்கள் உரிமை


Admin
Posts: 1270 Join date: 27/07/2010 Age: 25 Location: இந்திய திருநாடு
View user profile
Back to top Go down
View previous topic View next topic Back to top

Permissions of this forum:
You cannot reply to topics in this forum

சனி, 28 மே, 2011

சர்தாரா .. கொக்கா?

சர்தாரா .. கொக்கா? 

இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!

அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.

சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!

சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
 
 
==========================================================
அவசரப்படாதே மச்சி!!

 ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

Read more: http://www.livingextra.com/2011/03/blog-post_24.html#ixzz1NiENtxnS
வயது முதிர்ந்த தாத்தா ஒருவர் , மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் .

அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த தாத்தா  :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழுந்து  கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானாவே லைட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் .
 
ஒரு நாள் மருத்துவர் ஆர்வம் பொறுக்க முடியாமால் அந்த பெரியவரின்  வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லைட் ஆன் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "

அதற்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் ராத்திரிலே பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிறாரேனு நானே கவலைலே இருக்கேன்."


ராகு காலம்

ராகு காலம் 
நிழல் கிரகமான ராகுவின் நிழல் பூமியில் விழும் நேரமே ராகு காலமாகும் 

இதை நாபகம் வைத்துகொள்ள திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது நாயமா 
எமகண்டம் 
கேதுவின் நிழல் பூமியில் விழும் நேரமே எமகண்டமாகும் இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யகூடாது 
வித்தையில் புத்திய செளுத்திடின் திடமான நாபக சக்தி வெளிப்படும் 

யோகங்கள் 
நட்சத்திரமும் கிழமையும் சேர்ந்தால் யோகம் ஏற்படுகிறது அமிர்த யோகம் சித்தயோகம் நல்லது பிரபாலரிச்ட யோகம் மரண யோகம் ஆகாது 

தீதுறு நட்சத்திரங்கள் 
இந்த நட்சத்திரத்தில் எந்த செயலும் முதலில் செய்யகூடாது ஆனால் எப்போதும் செய்யும் செயல்களை தாராளமாக செய்யலாம் 
கரினாட்கள்
மாதங்களில் சில நாட்களில் கரினாட்கள் ஆகும் என்ன யோகம் வந்தாலும் இந்த நாட்களில் அதுவும் செய்யகூடாது

சனி, 7 மே, 2011

ஆறாம் பாவகம்


அன்பு மாணவர்களே இது வரை ஐந்தாம் பாவகம் பார்த்தீர்கள் இனி பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆறாம் பாவகம் பார்க்கலாம் .
இந்த பாவகத்தின் மூலம் நோய்கள், பகைவர்களால் உண்டாகும் துன்பங்கள், ஆயுதங்களினால் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சண்டைகள், உடல் உபாதைகள், பணம் நஷ்டங்கள், வம்புகள், வழக்குகள், நீதிமன்றம் போகுதல், காவல் நிலையம் செல்லுதல் , சிறைசாலை செல்லுதல், பாலுனுர்வு நோய்கள், பிறமாதர் தொடர்புகள், கடன்கள்  இவை அனைத்தும் அறியலாம் .

எப்படி பட்ட பாவகம் பாருங்கள் மாணவர்களே , இந்த பாவகம் சிக்கலானது
  1. இந்த பாவக அதிபதி வலு பெறலாமா?
  2. இந்த பாவக அதிபதியை  நாம் பிரட்சனைகளை செய்பவன் என்று நாம் எடுத்துகொள்ளவேண்டும்.
  3. இந்த பாவக அதிபதி எங்கு இருந்தாலும் அந்த பாவகதிர்க்கு பிரச்சனை ஏற்படும்
  4. உறவு சம்மந்தப்பட்ட பாவக அதிபதிகள் இந்த பாவகதில் இருந்தால் அந்த உறவு ஜாதகனுக்கு பிரச்சனை ஏற்படுத்தும், அவர்கள் சண்டைக்கு வருவார்கள், கடன் கேட்பார்கள், ஜாதனுக்கு முடிந்த வரை தொல்லைகளை கொடுப்பார்கள், ஜாதகன் அவர்களால் கஷ்டம் ,நஷ்டம் படுவான், அவர்களுக்குள் தகராறு வந்து கொண்டே இருக்கும்
  5. மூன்றுக்கு உடையவன் ஆறில் இருந்தால் சகொதிரனால் ஜாதகனுக்கு பிரச்சனை தான் ,அவனே எதிரியாக மாறுவான், கடன் கேட்ப்பான், சொத்து பங்கு கேட்ப்பான், சண்டைக்கு வருவான் , இவர்கள் இருவரும் ஒருவேளை மது அறிந்துவிட்டால் ,அவ்வளதுதான் பொது இடத்தில் சூப்பராக திட்டிகொல்வார்கள், சண்டை போட்டு கொள்வார்கள், கட்டி பிடித்து உருளுவார்கள் .
  6. நாளுக்கு உடையவன் ஆறில் இருந்தால் தாயாரே பிரச்சனை செய்வார் ,சதா ஜாதகனை திட்டிக்கொண்டே இருப்பார், தாய்க்கும் ஜாதகனுக்கும் அவ்வளவு ஒத்துவராது
  7. ஒன்பதுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் தந்தைக்கும் ,மகனுக்கும் அவ்வளவு பந்தம் இருக்காது , தந்தையார் சதா ஜாதகனை திட்டிகொனே இருப்பார்.
  8. ஆறில் ஐந்துக்கு உடையவர் இருந்தால் சாதகனின் குழந்தையால் ஜாதகருக்கு பிரச்சனை தான் , குழந்தை நோயால் அவதிப்படும், குழந்தைக்காக ஜாதகர் கடன் பட நேரிடும்
  9. ஏளுக்குடையவர் ஆறில் இருந்தால் மனைவிக்கும் ,ஜாதகனுக்கும் அடிக்கடி சண்டை வரும், ஒருவருக்கொருவர் ஒத்துபோகமாட்டார்கள், மனைவி வியாதியால் பீடிக்க படுவார்,  பொண்டாட்டிக்காக ஜாதகம் நிறைய கடன் வாங்குவான்,  போலிஸ் ஸ்டேசன் போகும் வரை இருவரும் சண்டையிட்டுகொல்வார்கள்,
  10. பதினொன்றுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் மூத்த சகொதிரனால் பிரச்சனைதான், அவனால் ஜாதகருக்கு துன்பம் ஏற்படலாம்
அன்பு மாணவர்களே ,புரிகிறதா, நன்றாக யோசியுங்கள், உங்கள் மூளையை நன்கு கசுக்குங்கள், புதிர் நிச்சயம் கிடைக்கும் , அதற்காக ஒன்றும் கவலை படாதீர்கள் , பாவக ஆராய்ச்சி பன்ன பன்ன பலன் எளிதாக கிடைத்துவிடும் 

சரி மாணவர்களே இனி ஆறாம் பாவகத்தில் நவ கிரகமும் நின்ற பலனை கொஞ்சம் பாப்போம்
  1. ஆறாம் பாவகதில் சூரியன் இருந்தால் தந்தையே பிரச்சனை ஜாதகருக்கு செய்வார். ஜாதகருக்கு எதிரான செயல்களை தந்தை செய்வார், சந்திரன் இருந்தால் ஜாதகனுக்கு இதே நிலைதான் ,இந்த பாவகதில் செவ்வாய் நின்றாள் இளைய சகொதிரன் வம்புக்கு வந்துவிடுவான் ,புதன் இங்கு இருக்க கூடாது தாய் மாமன் உறவு அவ்வளவு இருக்காது அவர் கடன் கேட்பார், ஜாதகர் கொடுக்காவிட்டால் அவ்வளது தான் மாமன் சண்டைக்கு வருவார் , மாமன் உறவு சுடுகாடு வரை இருக்க வேண்டும் ,ஜாதகன் மாமனிடம் சரண்டர் ஆகி கொள்ளவேண்டும்
  2. ஆறில் குரு இருந்தால் குழந்தையால் பிரச்சனை ஏற்படும் , குழந்தை அடிகடி வெளிவட்டாரத்தில் சண்டை போட்டு வந்துவிடும் ,ஜாதகன் குழந்தையை அடிப்பான், குழந்தைக்கு தந்தை மேல் பகை வரும் .பெரியோர்களும், ஆசிரியர்களும் ஜாதகனுக்கு சப்போர்ட் பன்ன மாட்டார்கள்
  3. ஆறில் சுக்கிரன் இருந்தால் பொண்டாடியிடம் அடி வாங்க ஜாதகன் தயாராக இருக்க வேண்டும், அதுவும் வாய் உள்ள மனைவியாக இருந்தால் ஜாதகன் பெட்டி பாம்பாக இருந்து பழகி கொள்ளவேண்டும், எதிர்த்தால் சமையல் கட்டில் சாமான் உருளும், தக்காளி பறக்கும், ஜாதகனுக்கு ஒழுங்காக சாப்பாடு கிடைக்காது, பழைய சாதம் சாப்பிட பழகி கொள்ளவேண்டும் ,கொஞ்சம் பேசினாலே சண்டைக்கு அவள் வந்துவிடுவாள் ,சாதகன் பாடு திண்ட்டாடம் தான் ,சாதகன் தைரியசாலியாக இருந்தால் இந்த நிலையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்,
  4. ஆறில் சனி நிற்க கூடாது மூத்த சகொதிரனால் பிரச்சனை வரலாம், வேலை காரர்கள் எதிர்ப்பு காட்டுவார்கள்,ஆரி ராகு இருந்தால் சாதகனின் தந்தையின் பாட்டி யினால் கொஞ்சம் பிரச்சனை வரும் , விதவை பெண்களினால் பிரச்சனை வரும், ஆறில் கேது இருந்தால் ஜாதகரின் பாடி தகராறு செய்வார்
  5. நோய்க்கு அதிபதியான ஆருக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நித்ய நோயாளியாக மாறிவிடுவார்
  6. இரண்டாம் பாவக அதிபதி ஆறில் நின்றாள் ஜாதகரின் குடும்பமே எதிராக செயல்படும்
  7. ஆருக்குடயவன் எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த பாவகம் குறிக்கும் அவயதில் நோய் ஏற்படலாம்
  8. ஆருக்குடையவன் லக்னத்தில் நின்றாள் ஜாதகரிடம் எதிரி தோல்வி அடைவான்
  9. லக்னாதிபதி ஆறாம் பாவகம் சென்றால் ஜாதகன் எதிரியிடம் ஜாதகன் தோல்வி அடைவான்
  10. ஆறாம் வீட்டில் ராகு ,கேது இருந்தால் எதிரிக்கு பலம் குறைந்துவிடும் ஜாதகன் எதிரியை வெல்லுவான்
  11. ஆறாம் பாவகம் வேலையை குறிக்கும் பாவகம் இவன் பத்தில் ல்நின்றால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான்
  12. ஆறாம் பாவக அதிபதி நன்றாக இருந்தால் (வலுத்து இருந்தால் ) சாதகனின் உடல் நன்றாக இருக்கும், அவனுக்கு கடன் கிடைக்கும், கடன் கிடைத்தால் ஜாதகன் கடனை அடைக்க மாட்டான் கடன் கொடுத்தவன் சண்டைக்கு வருவான், ஜாதகரின் மேல் கேஸ் போடலாம் இதனால் ஜாதகன் நீதி மன்றத்திற்கு போகுவான் , அங்கு தண்டனை கிடைக்கலாம், ஏன் சிறை சாலை கூட போகலாம், ஜாகனுக்கு அடிகிடைக்கும் அதனால் வெட்டு காயம் வரலாம் ,சாதகனும் சண்டைக்கு போகலாம் (உடல் வலுத்து இருந்தாலே ஜாதகனுக்கு வீரம் வந்துவிடும்)
  13. ஆறாம் அதிபதி கெட்டு இருந்தால் சாதகனின் உடல் வலிமை இருக்காது,  கடன் கிடைக்காது , எதிரிககளின் தொல்லை வராது  இதனால் இந்த அதிபதி ரொம்பவும் கெட்டுபோக கூடாது இதமாக, பதமாக ,சமமாக இருக்க வேண்டும் . அதாவது அளவுடன் இருக்கவேண்டும் .
  14. லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் தாய்மான் ஜாதகனிடம் அன்பாக இருப்பான் ,சாதகனும் மாமனிடம் அன்பாக பழகுவான் ஆனால் ஒரு காலகட்டத்தில் அதுவே பிரச்சனை ஆகலாம்
ஆறாம் வீடு அதிபதி பன்னிரண்டு பாவகத்தில் நின்றாள் என்ன பலன் ஏற்படும் என்பதை கொஞ்சம் பார்க்கலாம்
  1. ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்றாள் ஜாதகன் பயந்த சுபாவம் கொண்டவன், பகைவர் தொல்லை, கடன் தொல்லை வரும், அடிக்கடி நோய் வாய் படுவார்கள், நல்ல பரிகாரத்தின் மூலம் மட்டும் இதை சரி செய்யலாம்
  2. இரண்டில் நின்றாள் கண்பார்வை மங்கும், கல்வி திறமை குறைபடும், வாக்கு வன்மை பாதிக்கப்படும், கடன் வாங்கி கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துவார்கள்
  3. மூன்றாவது வீட்டில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் விரோதிகளாக மாறுவார்கள், கடன் சுமை அதிகமாகும் ,அலைச்சல் அதிகமாகும், சிற்றின்ப பிரச்சனை வரும், காது கோளாறு ஆகும்
  4. நாலாவது வீட்டில் இருந்தால் வீடு பூமி பிரச்சனை அதிகமாகும், கடன்களுக்காக வீட்டை அடமானம் வைக்கும் நிலை வரும், தாயார் உடல் நிலை பாதிக்கும் ,உறவினர்ஜ்கள் சண்டை ஏற்படும் , சுக குறை ஜாதகனுக்கு வரும்
  5. மனதில் கெட்ட என்னம் ஏற்படும் ,பாவ காரியம் செய்வார்கள், இருதய நோய் ஏற்படலாம், குழந்தைகளினால் பிரச்சனை ஏற்படலால்ம் காதல் கசக்கும் , புத்திர தோஷம் வரலாம்  .
  6. ஆறாம் வீட்டில் இருந்தால் இது ஆட்சி வீடாக இருந்தால் நல்லது தீய தன்மை குறையும், பகைவர்களால் நன்மை கிடைக்கும், கடன் தொல்லை இருக்காது , தீய பலத்துடன் இருந்தால் இதற்க்கு எதிர்மாறான நிலை ஏற்படும்
  7. ஏழாம் வீட்டில் இருந்தால் மனம் சஞ்சலம் படும், குடும்ப மகிழ்ச்சி இருக்காது, ஆண்மை கோளாறு  வரலாம் , கணவன் மாணவி இடையே ஒற்றுமை இருக்காது, வெளி வட்டார பழக்கம் நன்மை கொடுக்காது
  8. ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் இது நல்ல பலத்துடன் இருந்தால் ஒன்றும் ஆகாது விபரீத ராஜ யோகம் ஏற்படும் ,ஆனால் உடல் வலுஇழந்து காணப்படும், கடன் கிடைக்காது, வேலை கிடைக்காது ஒழுங்க்கா வேலைக்கு போக மாட்டார்கள் .
  9. ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையார் விரோத போக்கு வரலாம், ஜாதகன் எளிதில் ஏமாறுவான், நீதி நேர்மை இருக்காது, சொத்தை ஜாதகன் விரயமாக்குவான், பெரியோர்களிடம் மதிப்பு இருக்காது, தருமம் செய்யமாட்டான்
  10. ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழிலை சரி வர செய்யமாட்டார்கள், உல்லாச வாழ்க்கை நடத்துவார்கள், பிறரை மோசம் செய்வார்கள் , ஏமாற்றும் குணம் ஜாதகனுக்கு வரலாம், , தொழில் ஏதாவது பிரச்சனையாகி கொண்டே இருக்கும் , தொழிலில் நேர்மை இருக்காது
  11. இங்கு நற்பலதுடன் இந்த அதிபதி இருந்தால் பிரச்சனை வராது, ஆனால் மூத்த சகொதிரன் நோயினால் துன்பம் அடையலாம், லாபம் குறைவு ஏற்ட்படலாம், ஆசைகள் நிறைவேறாது, எந்த ஒரு முடிவும் பிரச்சனை வரலாம் ,கடன் வாங்கி லாபம் எட்ட முற்படுவார்கள்
  12. அலைச்சல் அதிகமாகும், சரியான சாப்பாடு கிடைக்காது, நல்ல தூக்கம் வராது, போகத்தில் குறை ஏற்படலாம், படுக்கை அரை சுத்தம் இருக்காது ஆனால், கடன் வராது , உடல் வலிமை இழக்கலாம், வெளிநாட்டு பயணம் சுகபடாது, குறுக்கு வழியில் வேலைக்கு செல்வார்கள், அந்தரங்கமான வேளையில் ஈடுபடுவார்கள்                  

அன்பு மாணவர்களே ,குசியாக இருக்கிறதா, புரிவது போல தெரிகிறதா ,போக போக தெரியும் ,நிச்சயம் புலப்படும், கவலையை விடுங்கள் அடுத்தவாராம் ஒரு அற்புதமான பாடத்தின் மூலம் சந்திக்கலாம்
என்றும் அன்புடன் உங்கள்
ஆசிரியர்
நன்றி, வணக்கம்



ஐந்தாம் பாவகம்

பஞ்சமுஹன் ஜோதிட கல்வி மையம்
நாள் 8 -5 -2011  பயிற்சி குறிப்பு 3
அன்பு மாணவர்களுக்கு வணக்கம், இது வரை நான்கு PAAVANKALAI  படித்து விட்டீர்கள் நல்லது,
பல பாவகத்தை ஆராயும் போது தான் நமக்கு பல விசயங்கள் கிடைக்கும்
ஆனால் மெதுவாக தான் கிடைக்கும் , அவசரபடாதீர்கள், நிதானமாக செயல்படும் போது தான் நமக்கு பல விசயங்கள் பிடிபடும்.
இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகம் ஆய்வு செய்வோம்.


ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .
மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,
சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்
  1. இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்
  2. இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது
  3. இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.
  4. சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்
  5. வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்
  6. ஐந்தாம் அதிபதி ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,
  7. ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது
  8. ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்
  9. தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்
  10. ஐந்தில் சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்
சரி மாணவர்களே இனி ஐந்தாம் பாவகத்தில் மற்ற கிரகங்கள் நின்றாள் என்ன பலன் என்பதை கொஞ்சம் பாப்போம்
  1. ஐந்தாம் மிடம் சூரியன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சூரியனாக இருந்தாலோ ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்
  2.  ஐந்தாம் மிடம் சந்திரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சந்திரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல்  ஆர்வம் இருக்கும்,
  3. ஐந்தாம் மிடம் செவ்வாய்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் செவ்வையாக  இருந்தாலோ ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,
  4. ஐந்தாம் மிடம் புதன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் புதனாக இருந்தாலோ ஜாதகனுக்கு மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும், தத்துபுத்திர  யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன் அலி கிரகம் என்பதால் )
  5. ஐந்தாம் மிடம் சுக்கிரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சுக்கிரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்
  6. ஐந்தாம் மிடம் குரு  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன்  குருவாக  இருந்தாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )
  7. ஐந்தாம் மிடம் சனி  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சனியாக  இருந்தாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,
  8. ஐந்தாம் மிடம்  ராகு  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்
  9. ஐந்தாம் மிடம்  கேது  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக  நாட்டம் வரலாம்,  தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில்  thaamatham  உருவாகும்  .
  10. ஐந்தாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு
  11. ஐந்துகுடையவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்
  12. ஐந்துகுடையவன் ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம் உண்டு
  13. ஐந்தாம் பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது
  14. ஐந்தாம்  பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம்  நிற்ககூடாது
  15. விரயாதிபதி, அட்டமாதிபதி இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்
  16. ஐந்தாம் பாவகதில் சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்
  17. ஐந்தாம் பாவகம் பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்
  18. ஐந்தாம் பாவகம் ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில் நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்
  19. ஐந்தாம் அதிபதி நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்
  20. ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும் .
  21. ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு, 
  22. ஐந்தாம் அதிபதி நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது 
  23. ஐந்தாம் பாவகம் தொழில் ஸ்தானத்திற்கு துன்ப பாவகமாகும்
  24. ஐந்தாம் பாவகம் மனைவிக்கு லாப பாவகமாகும்
  25. ஐந்தாம் பாவகம் தாய்க்கு வாக்கு, தான பாவகமாகும்
  26. ஐந்தாம் பாவகம் தந்தைக்கு சௌரிய பாவகமாகும்
  27. இளைய சகொதிரனுக்கு தைரிய ,வெற்றி பாவகம், 
  28. ஐந்தாம் பாவகம் மூத்த சகொதிரனுக்கு களத்திற பாவகமாகும்  

ஜோதிட சொல் விளக்கங்கள்

ஜோதிட சொல் விளக்கங்கள்
  1. ராசி சக்கிரம்   -ஒரு குழந்தை பிறந்த பொழுது வான மண்டலத்தில் கிரகங்கள் எந்தெந்த ராசி மண்டலத்தில் நிற்கின்றது எனும் காட்டும் வரை படமே ராசி சக்கிரமாகும்
  2. அச்தங்கிதம் -- சூரியன் மிகவும் வெப்பம் மிகுந்த கிரகமாகும் , சூரியனை ராகு, கேது, தவிர மற்ற கிரகங்கள் நெருங்கும் பொது சூரியனின் அதீத வெப்பத்தால் அந்த கிரகம் எரிந்துவிடுகிறது அல்லது பலம் இழந்துவிடுகிறது    கீழ் கண்ட பாகை காலையில் கிரகம் வரும்போது அது நடக்கும் .
         சந்திரன் 12  *,   செவ்வாய் 17 , புதன் 14 , குரு 11  சுக்கிரன் 10  சனி 15
அஸ்தமனம் அடைந்த பாவக காரக பலன் கிடைக்காது

3  வர்கோத்தமம்
ஒரு கிரகமானது ராசியிலும் நவாம்சதிலும் ஒரே ராசியில் நின்றாள் அந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என பொருள் ஆகும் , வர்கோத்தமம் பெற்ற கிரகம் பலம் உள்ள கிரகம் ஆகும்.

4  பரிவர்த்தனை

ராசி சகிரதிலோ அல்லது நவாம்ச சகிரதிலோ இரு கிரகங்கள் தங்களது ஆட்சி வீடுகளில் மாறி நிற்பது பரிவர்த்தனை நிலை ஆகும் , உதாரணமாக சுக்கிரன் புதனின் மிதுன வீட்டில் நின்று அந்த புதன் சுக்கிரன் வீட்டில் நின்றாள் அது பரிவர்த்தனை பெற்றுள்ளது என்று பொருள் ,
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பலம் பெற்ற கிரகமாகும்

5  கிரக உத்தம்

ஒரு ராசியில் செவ்வாய் நின்று இருந்து அந்த செவ்வாய்க்கு பின் நின்ற கிரகங்கள் கிரக யுத்தம் அடைந்துள்ளது என்பதாகும் , உதாரணமாக செவ்வாய் பூரம் 1  பாதம் நின்று குரு மகம் 4  பாதம் நின்ற நிலையாகும்
இந்த செவ்வாய் சிம்ம ராசியில் அதிக பாகை கடந்துள்ளது .
கிரக யுத்தத்தில் தோற்ற கிரகம் பூரண பலனை தராது

6  ஆத்மா காரகன்

ஒரு ராசி கட்டத்தில் அதாவது 12  ராசிகளில் எந்த ஒரு கிரகம் அதிகம் பாதம் பெற்றுல்லுதோ அதுவே அந்த கிரகமே ஆத்மா காரகன் ஆவார் ,
இந்த ஆத்மகாரகன் ஜாதகனுக்கு நன்மை பயக்கும் கிரகமாகும்
இந்த கிரகம் திசை புதிகளில் நன்மை பயக்கும்.

7  சஸ்தாச்டகம்
சஷ்டி என்றால் ஆறு ஆகும் அஷ்டம் என்றால் எட்டு ஆகும்
ஒரு ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகம் நின்ற ராசி கட்டத்திற்கு ஆறாம் ராசியிலோ அல்லது எட்டாம் ராசியிலோ ஒரு கிரகம் நிற்கும் நிலை சஸ்தாச்டகம் ஆகும்
சஸ்தாச்டகம்  பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை கொடுக்காது , .

8  த்விர்தாம்சம்
ராசி சக்கிரத்தில் ஏதாவது ஒரு ராசியில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகத்திற்கு இரண்டிலோ அல்லது பன்னிரின்டிலோ ஒரு கிரகம் நிற்கும்  நிலை ஆகும்
இப்படி கிரகம் நிற்கும் நிலை த்விர்தாம்சம் ஆகும் . இந்த நிலா பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை தராது

9 . வக்கிரம்

வக்கிரம் என்றால் பின்னோக்கும் நிலை ஆகும்
ராகு கேதுக்கள் எப்போதும் பின்னோக்கியே செல்லும்
சூரியன் ,சந்திரன் எப்போதும் முன்னோக்கியே செல்லும் ,மற்ற கிரகமான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, வக்கிர நிலை அடையும், சூரியனை நோக்கி ஒரு குறிப்பிட்ட பாகை கலையில் நெருங்கும் பொது மேற்கண்ட கிரகங்கள் வக்கிர நிலை அடையும் , குறிப்பாக பூமியை நெருங்கும் சமயம் கிரகம் வக்கிர கதி அடைகிறது வக்கிர நிலை பெரும் கிரகம் உச்ச கிரக பலனை தரும்.

௧௩ ௦ பாகை முதல் 245  பாகை வரை சூரியனை நெருங்கும் பொது கிரகங்கள் வக்கிர கதி ஏற்படும்

10 .  கேந்திரம் 
1 ,4 ,7,10  வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் , இவை விஸ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகவும் பலமாக செயல்படும்

11, திரிகோணம்
1 ,5 ,9  வீடுகள் திரிகோணம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகள் லட்சுமி ஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகளில் நிற்கும் கிரகம் நல்ல சுபமான பலனை கொடுக்கும்   

12 . பணபரம்
25811  வீடுகள் பண்பர ஸ்தானமாகும்
இரண்டாம் வீடு தன உழைப்பினால் வரும் பணமாகும்
ஐந்தாம் வீடு குழந்தை மற்றும் அதிர்ஷ்டத்தினால் வரும் பணமாகும்
எட்டாம் வீடு எதிர்பாராத விளைவினால் வரும் பணமாகும்
11  மிடம் தான் செய்யும் தொழில் மூலம் பலவழிகளில் கிடைக்கும் பணமாகும்

13  உபஜெய ஸ்தானம்
361011  மிடம் உபஜெயச்தானமாகும்
இந்த இடத்து அதிபதிகள் எந்த ஒரு செயலிலும் வெற்றியை கொடுக்கும் அதிபதியாகும்.

14 . ஆபோக்லீமம்
பணபரதிர்க்கு அடுத்த வீடுகள் அதாவது 36912  ஆம் வீடுகள்
இந்த இடத்தில் உள்ள கிரகங்கள் வலிமை குறைந்து செயல் படும் ஆனால் 9  பாவகம் இதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் 10  பாவக அதிபதி இதில் இருக்க கூடாது

15 . மறைவு ஸ்தானங்கள்
36812  ஆம் வீடுகள் ஆகும் இந்த வீடுகளில் ஒருகிரகம் நின்றாள் அது பலம் இழந்து விடுகிறது , அதில் மூணாம் பாவகம் அரை பலத்துடன் செயல்படும்